ரஜினியை மறைமுகமாக தாக்கிய மன்சூரலிகான்!
சென்னையில் சமீபத்தில் மதுரக்காரங்கே என்றொரு படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு வந்திருந்த நடிகர் மன்சூரலிகான் ஆரம்பத்தில் இருந்தே டென்சனாகவே காணப்பட்டார். விழா அரங்கத்தின் நிர்வாகம் சரியில்லை என்று குற்றம் குறை சொல்லி வந்தவர், ஒரு கட்டத்தில் சிலர் பணத்தை அள்ளுவது தமிழ்நாட்டுல, ஆனால் கொண்டு கொடுப்பது மைசூர்ல என்று பேசி விட்டு. நான் யாரைப் பத்தி சொல்றேன்று தெரியுதுல்ல என்று மீடியாக்களைப்பார்த்தும் கேட்டுக்கொண்டார்.
மன்சூரலிகான் இப்படி மறைமுகமாக பேசியது வேறும் யாரையும் அல்ல, நடிகர் ரஜினிகாந்த்தை தான். ரஜினி தனது படங்களில் மன்சூரலிகானுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை என்பதால், இந்த மாதிரி அவர் அவ்வப்போது மேடைகளில் புலம்புவது வாடிக்கையாகி வருகிறது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
No comments: