Header Ads

கள்ளக்காதலனுடன் செக்ஸ் வைத்துகொள்ளுமாறு மகள்களை துன்புறுத்திய தாய் கைது

சத்தீஸ்கர் மாநிலம் ஜோஷ்பூர் மாவட்டம் ராய்ப்பூரை சேர்ந்தவர் லீலாவதி யாதவ் (வயது 36). இவருக்கு 18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு லீலாவதியின்  கணவர் இறந்து விட்டார்.பின்னர் லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த  ஜும்மன் கான் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. 

காதலன் ஜூம்மன் கான் அடிக்கடி  லீலாவதியின் வீட்டுக்கு வந்து சென்றான். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு பின் லீலாவதி வீட்டிலேயே அவளுடன் குடும்பம் நடத்த தொடங்கினான்.இந்த நிலையில் லீலாவதி தனது மகள்களை ஜும்மன் கானுடன் செக்ஸ்வைத்து கொள்ளுமாறு வற்புறுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இந்த தொல்லை அதிகரிக்கவே  இரு சிறுமிகளும் உறவினர்கள் உதவியுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் லீலாவதியை கைது செய்தனர். காதலன் தலைமறைவாகி விட்டான்.

இது குறித்து போலீஸ் அதிகாரி அனிதா பிரபா மினிஜ் கூறியதாவது:-

கடந்த 2 வருடங்களக லீலாவதி தனது மகள்களை காதலனுடன் செக்ஸ் வைத்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்து உள்ளார். ஒருகட்டத்தில் அவர்களை துன்புறுத்த தொடங்கி உள்ளார். கடந்த மார்ச் 30 ந்தேதி சிறிய மகளை  காதலனுடன் படுத்து உறங்குமாறு கூறி உள்ளார். அவர் மறுக்கவே அவரது உடைகளைகலைந்து சிறுமியை கொடுமைபடுத்தி உள்ளார். அது போல் கடந்த மே மாதம்  26 ந்தேதி இதுபோல் மகள்களை காதலனுடன் செக்ஸ் வைத்து கொள்ளுமாறு துன்புறுத்தி உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் தங்களது தாத்தாவீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் உறவினர் உதவியுடன் புகார் அளித்து உள்ளனர்.

No comments:

Powered by Blogger.