விஜய்யை உறைய வைத்த கத்தி வில்லன்!
சினிமாக்களில் ஹீரோக்களை நல்லவர்கள் போன்றும், வில்லன்களை கெட்டவர்கள் போன்றும் சித்தரிப்பது ஒரு பாணியாகி விட்டது. ஆனால், ஒவ்வொரு படங்களையும் நகர்த்தி செல்வதே வில்லன்கள்தான். அவர்கள் பின்னாடிதான் ஹீரோக்க்ள ஓடிக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஹீரோக்களை விட வில்லன்கள் மிரட்டலாக நடித்திருப்பார்கள். காரணம், ஹீரோ என்பவர் ஒரு எல்லைக்குள்தான் நிற்க வேண்டும. ஆனால் வில்லனுக்கு எல்லையே கிடையாது. அவன் எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானலும் ஓடலாம், பாயலாம்.
அதனால், எல்லா ஹீரோக்களுக்குமே நாமும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை மனதிற்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், விஜய் போன்ற நடிகர்கள் வில்லனாக நடிப்பது சாத்தியமில்லை என்பதால், தாங்கள் இரண்டு வேடங்களில நடிக்கும் படங்களில் ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான ரோல்களில் நடித்து தங்களது வில்லன் ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள்.
அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள விஜய், வில்லன் வேடத்தில் இதுவரையில்லாத மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளாராம். எல்லை தாண்டிய அவரது நடிப்பைப்பார்த்து யூனிட்டில் உள்ளவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது ஒருபக்கம் இருந்தாலும், இப்போது விஜய்யே தான் நடித்த காட்சிகளை போட்டுப்பார்த்து விட்டு ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறாராம்.
இந்த தகவலை தனது ரசிகர்கள் வட்டாரத்தில் அவர் கசிய விட்டதையடுத்து, தங்கள் தளபதியின் வில்லன் அவதாரத்தை காண அவரது ரசிக கோடிகள் ஆவலோடு காத்திருக்கிறார்களாம்.
No comments: